Friday, September 23, 2011

சுஜாதா - கணையாழி கடைசி பக்கங்கள்


சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்’, ‘பெட்டி’, ‘கடைசிப்பக்கங்கள்’ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.............


”என் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.
கணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.”
                                                                                                                  ....................சுஜாதா

Wednesday, September 14, 2011

எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல்

 
    ஆனைமலைப் காடுகளில் தலைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத்தோட்டங்களில் 
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
......நீங்கள் கதகதப்பாய் உறுஞ்சிக் குடிக்கும் 
ஒவ்வொரு துளி தேநீரிலும் .............. 
கலந்திருக்கிறது எமது உதிரம்.......
                                ..........ஆதவன்  தீட்சண்யா


உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் 
RED TEA  by P.H.DANIEL ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து ”எரியும் பனிக்காடாக” தமிழுக்கு வந்திருக்கிறது................ 






வாழ்ப்பாறை தேயிலைத்தோட்டங்களின் அழகு, தனிமை, சோகம்