Friday, August 5, 2011

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா



அச்சடித்த புத்தகத்திற்கு இருக்கும் மற்ற கலாசார அடையாளங்களை எலக்ட்ரானிக் முறைகளால் மாற்ற முடியாது................
புத்தகங்கள் செத்துப்போக காகிதம் சாகவேண்டும்.  அதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்...............  
அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட்டு,  அதையே சாப்பிடும்படியாக எதாவது கண்டுபிடித்து விடுவார்கள்.........




”பத்தாம் பக்கத்துக்கு அப்புறம் நல்ல டேஸ்ட்டுங்க. அஞ்சாவது அத்தியாயம் லேசா காரம்..........”


             சுஜாதாவின் 60 அமெரிக்க நாட்கள்..............
                                            .............புத்தகத்திலிருந்து (83-பக்கம்)

Tuesday, August 2, 2011

இன்று …........ஆடி மாதம்............. பதினெட்டாம் நாள்......................


















சற்று ஏறக்குறைய 1043-வருடங்களுக்கு முன்பு........
அதாவது 968-ம் ஆண்டு ஆடி மாதம் 18-ம் 
நாள் தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லை சிற்றம்பலத்துக்கு 
மேற்கே அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது வீரநாராயண ஏரி” 

ஏரிக்கரையிலே ஒரு காட்சி.............................. 


ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.





பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து          தந்தநிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ செவந்திப்பூ மல்லிகை முல்லை இருவாட்சி செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும் சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும் வெள்ளப் பாட்டும் கும்மியும் சிந்தும் பாடினார்கள்.
 
"வடவாறு பொங்கி வருது
          வந்து பாருங்கள் பள்ளியரே!
     வெள்ளாறு விரைந்து வருது
          வேடிக்கை பாருங்கள் தோழியரே!
     காவேரி புரண்டு வருது
          காண வாருங்கள் பாங்கியரே!


நன்றி...........

       ..........கல்கியின் பொன்னியின் செல்வன்..........


..........தமிழர் மரபின் வழி வந்த 
      உன்னதமான நாள்...........



வாழ்த்துக்கள்..........
ப்ரியங்களுடன்
த்யாகு.........